Sunday, November 13, 2011

புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்

 

நவம்பர் 16 மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.அனைத்துப்பகுதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,குழந்தைகள் என அனைவரையும் அழைக்கிறோம்.குழந்தைகளை அழைத்து வாருங்கள்.ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்தோடு வாருங்கள்.ஒரு கையில் புத்தகத்தை இறுகப்பற்றி மறு கையை முஷ்டி உயர்த்தி முழக்குவோம்.எங்கள் புத்தகங்களைப் பறிக்க ஆட்சியாளர்களை அனுமதியோம்.கவிஞர்கள் கவிதைகளோடு வாருங்கள்.ஆர்ப்பாட்ட முடிவில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து மறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூலகத்தைக் காக்க –இடைவிடாது போராட சபதம் ஏற்க இருக்கிறோம்.மெழுகுவர்த்தி அங்கே இருக்கும்.புத்தகங்களோடு அனைவரும் வாரீர்.அறிவுக்கு எதிரான அராஜகத்தை முறியடிக்க ஆர்ப்பரித்து எழுவோம்.தமுஎகச அழைக்கிறது வாரீர்.

ச.தமிழ்ச்செல்வன்,மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன்,பொதுச்செயலாளர்.

1 comment:

kashyapan said...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ---காஸ்யபன் AC