Showing posts with label அழைப்பு. Show all posts
Showing posts with label அழைப்பு. Show all posts

Thursday, July 5, 2012

மாநில திரைப்பயண நிறைவு விழா

ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது.வாய்ப்புள்ளோர் பங்கேற அன்புடன் அழைக்கிறோம்.

Invitation

Wednesday, December 21, 2011

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

சென்னை அலுவலகம்-421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

மதுரை அலுவலகம்-57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன.2011இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.குறும்பட ஆவணப்படங்களுக்கன பரிசுக்கும் 2011இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும்.எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/பட்த்தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி பொதுச்செயலாளர்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,மதுரை-625001.செல்- 9442462888. வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29-02.2012.

புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது.நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.

1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-

4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-

7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது-சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-

9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிட அன்போடு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்konangi pics 379

Tuesday, July 27, 2010

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்-அழைக்கிறோம்

 நாடாளுமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும்

தமிழைப்

பயன்பாட்டு மொழியாக்கக் கோரிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட்-6,2010

மாலை-4 மணி : மெமோரியல் ஹால் எதிரே,சென்னை-சென்ட்ரல் அருகே

தலைமை

சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர்

பங்கேற்போர்

டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்

எஸ்.கே. மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்

ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

விடுதலை இராஜேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்

சு.வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

ஆர்.வைகை, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

பால் கனகராஜ், தலைவர், சென்னை பார் கவுன்சில்

பிரசன்னா, தலைவர், பெண்வழக்கறிஞர்கள் சங்கம்

சே.சு.பாலன் ராஜா, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

இரா.மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அ.குமரேசன், பத்திரிகையாளர்

மயிலை பாலு, பத்திரிகையாளர்

பிரம்மா, ஊடகவியலாளர்

தியாகச்செம்மல், ஊடகவியலாளர்

பிரளயன், நாடகவியலாளர்

பா.வீரமணி, ஆய்வாளர்

பிரின்ஸ், கல்வியியலாளர்

ந.ஸ்டாலின், சட்டம், முதுநிலை அம்பேத்கர் சட்டக்கல்லு ரி

ம.நா.குமார், எஸ்.எப்.ஐ, அமைப்பாளர்

மணிநாத், தலைவர், வடசென்னை

கி.அன்பரசன், செயலாளர், தென்சென்னை

நா.வே.அருள், செயலாளர், வடசென்னை

விடியல் கலைக்குழு, தென்சென்னை சக்திக்கலைக்குழு

போக்குவரத்து அரங்கம் வி பி சி கலைக்குழு

புதுயுகம் இசைக்குழு, பகத்சிங் இசைக்குழு, தமிழ்ஒளி இசைக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

வடசென்னை தென்சென்னை

நீதிமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 348ஆம் பிரிவு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்கிறது. சுதந்திர இந்தியாவில் இந்த நிலையை மாற்றிட அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் முடியும். அதனால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதே சட்டத்தின் உட்பிரிவு உயர்நீதிமன்றங்களின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் திகழமுடியும் என்கிறது. அதற்கு தமிழகச் சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்திட ஆளுநர் அதிகாரம் வழங்கமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியாயிற்று. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புரல்தானே? ஆனால் ஏன் இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட, மனுக்கள் தாக்கல் செய்ய, தமிழக அரசு மத்திய அரசிடம் வாதாடவேண்டும். போனது போகட்டும். இனியாவது வாதாடுமா?

நாடாளுமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 120 ஆம் பிரிவில் நாடாளுமன்ற அலுவல்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசலாம். ஆனால் அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பதிலளிக்கவேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாத ஒருவர் மத்திய அரசியல் அமைச்சராக செயல்பட முடியாது. இது பெரும் அநீதி. நமது நாட்டு நாடாளுமன்றத்தில் நமது மொழியில் பேச முடியாது. இது நமது சுயமரியாதைக்கு இழுக்கு. வாக்களித்து அனுப்பிய மக்களுக்கு அவமரியாதை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரவர் தாய்மொழியில் பேசவும் அதை உடனுக்குடன் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் இது எளிதான காரியமே. எவ்வளவு செலவாகிப்போகும்? ஆகட்டுமே. கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகிற பல்லாயிரம் கோடி பணத்தோடு ஒப்பிடும்போது இது வெறும் கொசுறு.

(மாநாட்டுக்கு 400 கோடிதமிழுக்கு…? நூலிலிருந்து)

________________________________________________________________________________________________________

உழவுத்தமிழனை

உழைப்புத்தமிழனை

நெசவுத்தமிழனை

பசித்த தமிழனை

தாழ்த்தப்பட்ட

சாதித்தமிழனை

சபிக்கப்பட்ட

சேரித்தமிழனை

மலைகளில் வாழும்

ஆதித்தமிழனை

மலங்களை அள்ளும்

வீதித்தமிழனை

கடலுக்குள் மூழ்கும்

உப்புத்தமிழனை

கரைகளில் வாழும்

குப்பத்தமிழனை

உலைக்களம் வேகும்

நெருப்புத்தமிழனை

செருக்களம் சாகும்

துருப்புத்தமிழனை

இறுக்கிடும் சங்கிலி

எவையோ அவைதான்

என்தமிழ்த்தாயை

இறுக்கிடும் தளைகள்

//தணிகைச்செல்வன்//

Tuesday, April 21, 2009

அன்புடன் அழைக்கிறோம்

image description                image description

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புத்தகம் பேசுது மாத இதழும் இணைந்து உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறோம்.சென்னை கடற்கரைச் சாலையில் பல்கலைக்கழக தமிழியல்துறை கூட்ட அரங்கில் நடைபெறும் கருத்தரங்கிற்கு அன்புடன் அழைக்கிறோம்.