Showing posts with label இயக்கம். Show all posts
Showing posts with label இயக்கம். Show all posts

Wednesday, June 20, 2012

Mobile theatres to take serious cinema to masses across state- by Tha.mu.e.ka.sa.-The Hindu news dated 16th jun 2012

clip_image001

CoimbatoreDelhiHyderabadKochiMaduraiMangaloreThiruvananthapuramTiruchirapalliVijayawadaVisakhapatnam

 

News » States » Tamil Nadu

CHENNAI, June 16, 2012

 

news story by B. Kolappan

 

clip_image002

Thr propaganda van of the Tamil Nadu Progressive Writers and Artists Association carrying projector and other materials for screening films on the streets. Photo: M. Karunakaran

Multiple screenings to mark a century of Indian cinema

Today, only some film-buffs might remember Avan Amaran, a film with strong Marxist moorings, highlighting the relentless struggle of the working class.

Released in 1958, after being subjected to massive editing by the Censor Board for its “strong political message,” the film failed to make a mark in the box office, despite a good story, excellent direction (by Veena S. Balachandar and Leftist producer S. Nagarajan) and an impressive cast.

And now, fifty four years after its release, the film will be screened again by the Tamil Nadu Progressive Writers and Artistes Association — however, not in theatres, but on the streets, in as many as 600 places all over the State.

“Not just Avan Amaran, beginning Saturday in Chennai, the Association will screen many short films, documentaries and world class films including Charlie Chaplin's comedies to mark the 100th anniversary of Indian cinema. As many as 1,500 of them will be screened in 15 days,” says S. Tamilselvan, president of the Association.

The film movement affiliated to the Association has already sent 15 copies of 25 short films and documentaries to be screened in 15 districts. Directors and producers of the short films and documentaries will be invited for discussions during the screening.

“Our objective is to create an audience for serious cinema. Every year, many good films are made out of individual efforts but they are not given any attention due to lack of patronage. We want to take the films to the people,” noted Mr. Tamilselvan.

The Association has in its possession over 500 movies in various languages that have made a mark across the world. Moreover, in every district, the Association has a bank of CDs and DVDs. Many of these will be screened during the next fortnight.

“There is no point in just blaming the film world for making B-grade commercial films. We have to inculcate a taste for alternative and serious film among the masses. This screening will go a long way in fulfilling such an objective,” Mr. Tamilselvan said.

Film director Karuna, who is also the co-ordinator of the film movement of the Association, said films had been classified to suit various sections.

“We will screen a different set of movies in schools and colleges, and a different variety on the streets,” he said.

The Association has good prints of some of the best Iranian and Chinese movies, besides films by Indian directors such as Satyajit Ray, Mrinal Sen and others.

“The Iranian movie, Children of Heaven, will be a feast for school children,” Mr. Karuna said. Akrinai, a short film on transgenders, Aarayatha Theerpu, which depicts the plight of members of the Irula community working in granite quarries, and Ezhumalai Jama, a film on ‘therukoothu' artistes will also be screened.

Keywords: century of Indian cinema, mobile theatres

Friday, May 27, 2011

என் சக பயணிகள்-8 அஸ்வகோஷ் (ராசேந்திர சோழன்)

aswagosh என் சிறுகதைகள் அச்சில் வரத்துவங்கியதும் நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து வேலை செய்யத்துவங்கியதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.கோவில்பட்டி நண்பர்கள் என் சிறுகதைகளின் கைப்பிரதிகளை வாசித்துவிட்டு அஸ்வகோஷ் எழுதிய பறிமுதல் படிச்சியா? கடன் கதையைப் படிச்சியா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.முற்போக்கு எழுத்தாளர்கள் என்றால் முஷ்டியை உயர்த்தியபடியே எந்நேரமும் திரிவார்கள் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருந்த அன்றைய என் இலக்கிய மனம் அஸ்வகோஷின் கதைகளை வாசித்தபோது பேரானந்தம் கொண்டது.முற்போக்காளர் குறித்து வெளியில் இருப்பவர்கள் கட்டமைத்த பிம்பங்கள் பொய்யென்று அஸ்வகோஷின் கதைகள் எனக்கு உரைத்தன.தேவையற்ற வரிகள் ஏதுமில்லாத எவ்வளவு அழகான யதார்த்தமான கதைகள் அவருடையவை.அன்று அவர் தமுஎசவின் மாநிலத் துணைச்செயலாளராக இருந்தார்.சீக்கிரமே நான் அநேகமாக அவருடைய சீடனாகவே மாறிவிட்டிருந்தேன்.அமைப்புக்குள் ‘குண்டக்க மண்டக்க’ பேசிக்கொண்டிருக்கும் ஆளாக அன்று நான் வளர அவரே காரணமாக இருந்தார்.அது வேறு கதை.இங்கு அவருடைய கதைகள் பற்றி மட்டும் பேசுவோம்.

பாலியல் சார்ந்த கதைகளை வெகு இயல்பாக அவர் எழுதுவார்.அதுதான் அவரிடம் எனக்கு மிகுந்த ஈர்ப்பை அன்று ஏற்படுத்தியது.சமூகப்பிரச்னைகளை எழுத்தில் கொண்டுவருவதில் அவர் தனக்கேயான பாணியைக் கொண்டிருந்தார் என்றாலும் அன்று நான் ஈர்க்கப்பட்டது அவருடைய பாலியல் சார் கதைகளால்தான்.என் மனநிலை அந்த 24 வயதில் சஸ்தி ப்ரதா,பாரதி முகர்ஜி,கமலாதாஸ் என்று ’மீறிய’ எழுத்துக்களால் தகவமைக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம். கோணல்வடிவங்கள்,புற்றிலுறையும் பாம்புகள் போன்ற கதைகளை நான் தேடி வாசித்து வியந்தேன். சமீபத்தில் அவருடைய தொகுப்பில் வாசித்த ஊனம் கதை வடிவத்திலும், மொழியிலும் , சொன்னதைப்பார்க்கிலும் சொல்லாமல் விட்ட பாங்கிலும், மிக அற்புதமான கதையாக வந்துள்ளது.இடதுசாரி எழுத்தாளர் என்றால் சாமியார்கள் மாதிரி பாலியல் விஷயங்களை புறங்கையால் ஒதுக்க வேண்டியதில்லை. பாலியலை ஒரு சமூகப் பிரச்னையாக அதற்கு உரிய அளவிலான இடம் அளித்து அதற்கான உக்கிரத்தோடு சொல்ல வேண்டும்.

பொருளியல் வாழ்வுதான் எல்லாவற்றுக்கும் இறுதியில் தீர்மானிக்கும் அம்சம்.அதே சமயம் மனித குல வரலாற்றில் உற்பத்தி (மனித குல) மறு உற்பத்தி இவை இரண்டின் முக்கியத்துவம் குறித்தும் ஏங்கல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில் நுட்பமாக விளக்கியிருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.அந்தப்பின்புலத்தில் நின்று வாழ்வின் மிக முக்கிய அங்கமான பாலியல் குறித்து நம் கதைகள் பேச வேண்டும்.

அப்படிச்சொன்ன முதல் முற்போக்குப் படைப்பாளி அஸ்வகோஷ்தான். ஜெயகாந்தன் சரஸ்வதி இதழில் சில முயற்சிகளைத் தொடங்கியிருந்தார் என்பது உண்மை என்றபோதும்.பாலியல்சார் எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதி அப்படியான ஒரு பாரம்பரியத்தை நாங்கள் வளர்த்தெடுக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எனக்கேற்படுகிறது.இன்று சில இளம் படைப்பாளிகள் அது பற்றி எழுதுவதில் அளவும் தன்மையும் குறித்த பார்வை இல்லாமல் சிக்கிக்கொள்வதைப் பார்க்கும்போது இந்த வருத்தம் மேலோங்குகிறது.

அமரர் தி.ஜானகிராமன் போன்றவர்கள் இதில் பெண் உடலை மட்டும் கொண்டாடும் இடத்தில் நின்றுவிட்டதாகப்படுகிறது.ஜி.நாகராஜன்தான் பாலியல் சார்ந்த வாழ்வை அதி உக்கிரத்தோடு சொன்ன முதல் தமிழ்ப்படைப்பாளி.ஜி.நாகராஜனை எப்போதுமே அண்ணாந்துதான் பார்த்தபடி இருக்கிறேன்.

அஸ்வகோஷ் இடது முகாமிலிருந்து இந்தத்தளத்தில் துணிச்சலாகப் படைப்புகளை முன்வைத்த முன்னோடி.ஆனால் அவருடைய எல்லாக்கதைகளும் இது விஷயத்தில் சரியாக வந்ததாகச் சொல்ல முடியாது.வானம் வெளிவாங்கி போன்ற தோல்வியடைந்த கதைகளும் உண்டு.பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலம் வாசகனுக்கு உரைக்கும் வண்ணம் அக்கதை வந்து சேரவில்லை.செயல்முறை விளக்கம்போல விலாவாரியான சித்தரிப்பே அக்கதையில் தூக்கலாகிவிட்டதுதான் பலவீனம்.கோணல் வடிவங்கள் கதையில் அது கலையழகுடன் ஒருங்கு கூடி வந்துள்ளது.அதுமட்டுமன்றி கோணல் வடிவங்கள் ஆணாதிக்கத்தின் ஒரு நுட்பமான வடிவத்தைப் பேசும் கதையாகவும் ரூபம் கொள்கிறது.தற்செயல் கதையிலும் கலை அமைதி கூடி வந்துள்ளது-சில பகுதிகள் தவிர.தற்செயல் கதையில் வரும் வத்சலா, ஊனம் கதையின் நாயகி சாந்தா,புற்றிலுறையும் பாம்புகள் கதையில்(அடடா என்னா மாதிரி கதை அது)வரும் வனமயிலு போன்ற மனுஷிகள் தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் அபூர்வமாக வெளிப்பட்டவர்கள்.இப்பாத்திரங்கள் தமிழ் நவீன இலக்கியத்துக்கு அஸ்வகோஷ் அளித்த கொடை என்பேன்.

அஸ்வகோஷின் சிறுகதைகள் பிரதானமாக சமகாலச் சமூக யதார்த்தங்களை அழகியலோடும் ஒருவித உணர்ச்சிகர மனநிலையோடும் முன்வைத்தவை.அவரே பின்னுரையில் பட்டியலிடுவதுபோல, “ சொல்லப்பட்ட செய்தியிலும் செய் நேர்த்தியிலும் தட்டித்தட்டிப் பொறுக்கிப் பார்த்துக் கனகச்சிதமாகச் செதுக்கி உருவாக்கப்பட்ட கதைகள் ஒரு இருபதுக்கு மேல் தேறும்.” அவர் அப்படிச்சொன்னாலும் என் பார்வையில் ஒரு நாலைந்து கதைகளைத்தவிர 50க்கு மேற்பட்ட அவரது கதைகள் இலக்கியத்தரமான முற்போக்கான கதைகள்தான் என்று அடித்துக் கூறலாம். ஏழ்மை,இல்லாமை-அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள் , சிதையும் மனித மாண்புகள்,அதையும் மீறி வெளிப்படும் அன்பும் நேசமும் -இவைதான் பெரும்பாலான அஸ்வகோஷ் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை. எவ்வித மினுக்கும் தளுக்கும் இல்லாத ரொம்பச் சாதாரணமான மொழியில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது.வட ஆற்காடு வட்டார மொழி இயல்பாக அவரது கதைகளில் ஊடாடும்.வறுமையை நேரடியாகச் சொல்லாமல் அது ஏற்படுத்தும் உறவுச்சிக்கல்கள்,மன அவஸ்தைகளைக் கதையாக்கியதுதான் அஸ்வகோஷின் தனிச்சிறப்பு.

மூன்று தளங்களில் அவரது கதைகள் இயங்கின.ஒன்று ஆண்-பென் உறவு சார்ந்தது.இரண்டாவது சமூக யதார்த்தங்கள் சார்ந்தது.

மூன்றாவதாக அவருடைய மனதை ஆக்கிரமித்து அவரை அமுக்கிப்போட்டதாக நான் குறிப்பிட விரும்புவது கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவருடைய காட்டமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் கேலியும் நக்கலும் நிறைந்த கதைகள்.எழுத்தாளனின் பார்வை இப்பிரபஞ்சத்தில் உள்ள எதன் மீதும் கவியும்.கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் படைப்புக்குள் வரக்கூடாத விதிவிலக்காக இருக்க முடியாது.பக்தி மார்க்கம்,மையம்,நிலச்சரிவு போன்ற சிறுகதைகள் மட்டுமின்றி அவருடைய நாவல் ஒன்றும் இதுகுறித்து விரிவாகப் பேசியது.எழுத்தாளர் மன்னார்சாமியைக் கதை நாயகனாகக் கொண்டு அமைப்பைக் கிண்டலடித்த அந்த நாவலை நான் கையெழுத்துப் பிரதியாக வாசித்தது.அது அச்சில் வந்ததா என்று தெரியாது.21ஆவது அம்சம் நாவல் அப்போதே வந்து விட்டிருந்தது.சொல்ல வேண்டியது என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய மனதை வெகுவாகப் பாதித்திருந்தது.1988க்குப் பிறகு ரொம்ப காலம் கதையே எழுதாமல் இருந்து விட்டு 2008இல் அவர் தீராநதியில் ஒரு கதை எழுதியபோது அதே கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குதிரை வாங்குவதற்காக நிதிக் கோட்டா போடுவது பற்றியதான ஒரு நக்கல் கதையே எழுதியிருந்தார்.மீள முடியாத சிறைக்குள் சிக்கியது போல அவர் இதற்குள் மாட்டிக்கொண்டுவிட்டாரே என்று எனக்கு மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது.கம்யூனிஸ்ட் கட்சி மீதான விமர்சனத்தை கதைக்குள் வைத்தது பற்றியதான வருத்தமில்லை அது.இந்த அளவுக்கு மீறிய எதிர்மனநிலையால்தான் அவர் மீண்டும் எழுந்து படைப்பிலக்கியத்துக்குள் வரமுடியாமல் போனாரோ என்கிற வருத்தம்தான் எனக்கு.

பொக்கேஷியன் கதைகள் என்கிற பெயரில் கிறித்துவ மடாலயங்கள்,பாதிரிகள் பற்றிய விமர்சன கிண்டல் கதைகள் இருப்பது போல எந்த அமைப்பைப்பற்றியும் கேலிக்கதைகள் காலந்தோறும் உருவாகத்தான் செய்யும்.கம்யூ.கட்சிகள் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் மற்ற கதைகளில் காணக்கிடைக்கும் கலை அமைதி அஸ்வகோஷின் கம்யூ.கட்சிக் கேலிக்கதைகளில் காணக்கிடைக்கவில்லை என்பது உண்மை. கம்யூனிஸ்ட் நக்கல் நாவலான ஜெயமோகனின் 700 பக்க ’பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலிலும் கடைசியில் வரும் ஒரு ஆஸ்பத்திரி வார்டு பற்றிய 20 பக்கம் தவிர பாக்கி 680 பக்கமும் கலையாக மாறாமல் வெறும் தத்துவ வியாக்கியானமாகவே தேய்ந்து போனது.கம்யூ.கேலிக்கதைகள் எழுதுகிற பாரம்பரியமும் பயிற்சியும் அதற்குத்தேவையான முதிர்ச்சியும் கலை நுட்பமும் இன்றுவரை நம் நவீன தமிழ்ப் படைப்பாளிகளுக்குச் சித்திக்கவில்லை என்றே படுகிறது.எனினும் இவ்வகை இலக்கியத்தையும் தொடங்கி வைத்த முதல் படைப்பாளி என்கிற பெருமைக்கு உரியவராகவும் அஸ்வகோஷ்தான் திகழ்கிறார்.ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள் நாவல் முதலிலேயே வந்து விட்டாலும் அது கம்யூ. எதிர்ப்பு நாவல் என்கிற வகையிலேயே அடங்கும்.பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் ,சுஜாதாவின் குருபிரசாத்தின் கடைசி நாட்கள் போன்றவை கம்யூனிஸ்ட் விமர்சன வகையில் அடங்கும்.

வட்டங்கள் என்கிற அவருடைய நாடகம் ஒன்றும் நூலாக வந்துள்ளது.பாதல் சர்க்காரிடம் பயிற்சி பெற்ற நாடகக்காரர் அவர்.அரங்க ஆட்டம் என்கிற நாடகம் பற்றிய அருமையான தொடர் ஒன்றை அவர் செம்மலரில் எழுதி வந்தார்.உதயம், பிரச்னை என்கிற இரு இலக்கிய இதழ்களைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.அப்போது திருப்பூரிலிருந்து தோழர் நடராஜன் பொறுப்பில் விழிப்பு இதழும் சென்னையிலிருந்து தோழர் ச.செந்தில்நாதன் பொறுப்பில் சிகரமும் வந்துகொண்டிருந்தன.

நிறைய நாடகங்களை அவர் எழுதி இயக்கி மக்களிடம் கொண்டு சென்றார்.எமெர்ஜென்ஸி குறித்த அவருடைய தயாரிப்பான விசாரணை என்னும் நாடகத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் பார்வையாளர்கள் மனம் கொந்தளிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டவை.

விதி வசத்தால் அவர் எம்மைப் பிரிந்து சென்றார்.(விதி என்று நான் குறிப்பிடுவது இயக்க விதிகளைத்தான்.)அவரால் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் ஈடுபட முடியவில்லை.90களுக்குப் பின் புதிய படைப்புகள் வரவில்லை.இயக்கத்தின் தேவையை ஒட்டி நிறைய எழுதி வருகிறார்.இதுவே நாம் அக்கறையுடன் விவாதிக்க வேண்டிய மனநிலைதான் என்று தோன்றுகிறது.நாம் சந்திக்க வேண்டிய-தாண்டி வரவேண்டிய மனநிலையாகவும் அவருடைய ரூபத்தில் அது நம்முன் சவாலாக நிற்கிறது.

அவருடைய 50 சிறுகதைகளின் தொகுப்பை தமிழினி 2002இல் வெளியிட்டுள்ளது.

Thursday, August 12, 2010

குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை

நேற்று இட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்று நடந்த போராட்டம் பற்றி...

gudi-1

வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் நிற்கும் மக்களை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர்.பி.சம்பத் ,மாநிலச்செய்லாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தோழர் லதா, வேலூர் மாவட்டச்செயலாளர் நாராயணன் போன்றோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற ஊர்வலமாகப் போன போது இடையில் வழிமறித்த காவல்துறை ஆர்.டி.ஓ வும் வட்டாட்சியரும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகவும் பேசித் தீர்க்கலாம் எனவும் தலைவர்களை அழைத்துச்சென்றனர்.

பேச்சு வார்த்தையில் தோழர்கள் அந்த நிலப்பகுதியை மறு நில அளவை (சர்வே) செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.முதலில் மறுத்துப் பின் கடைசியில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வட்டாட்சியர் அதில் கையொப்பம் இட்டு ஆர்.ட்.ஓ கையொப்பம் இடப்போகும் நேரத்தில் மேலிடத்திலிருந்து ஒரு தொலைபேசி வர ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வட்டாட்சியரிம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு ஆர்.டி.ஓ ‘தப்பி’விட்டார்.ஆர்டிஓ கையெழுத்துப் போடாமல் நான் என்ன செய்ய என்று வட்டாட்சியர் அம்மாவும் மறுத்துவிட தலைவர்களையும் அந்நேரவரை மணிக்கணக்காக நடுரோட்டில் வெயிலில் காத்திருந்த மக்களையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது.15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தோழர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் இன்னும் தெருவில்தான்.

தமிழ்ச்சினிமாக்களில்தான் இப்படி வில்லன்களுக்கு ஆதரவாக உச்சகட்டத்தில் மேலிடத்திலிருந்து தொலைபேசி வரும்.நிஜ வாழ்க்கையிலும் இன்று அப்படி நடந்துள்ளது காவல்துறை நண்பர்கள் சி.எம் ஆபீசிலிருந்தே அரெஸ்ட் பண்ணச்சொல்லி தகவல் வந்ததாகக் கூறுகிறார்கள்.பற்பல ஆண்டுகளாக வீடுகட்டி நன்கு வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.வடாட்சியர் அலுவலத்தை விட்டு இன்று துரத்தப்பட்டுள்ளனர்.பராசக்தி வசனம்போல மக்கள் ஓடினாள் ஓடினாள் என்று ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.ஆளுக்கு 50 வீடும் பங்களாவும் என்று மாவட்ட வாரியாக ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும் உடன்பிறப்புகளின் குடியிருப்புகளுக்குள் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு நுழைவார்கள் .காவல்துறை பலத்தோடும் கட்சிமாறி திமுகவுக்குள் வரும் இதுபோன்ற தாதாக்களின் தயவிலும் தேர்தலில் கவர் கொடுக்கும் அன்னன் அழகிரியின் ராஜதந்திரத்தை வைத்தும் ரொம்ப காலத்துக்கு வண்டியை ஓட்டிவிட முடியாது.மக்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியாலும் அரிசியாலும் மட்டும் கொடியை நாட்டிவிட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

நியாயமான மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களைக்கூட தன் மாசுமருவற்ற ஆட்சிக்கு எதிரான சதி என்றும் கலகம் என்றும் பீதியடையாமல் கலைஞர் தன் பகுத்தறிவின் பரப்புக்குள் நின்று இப்பிரச்னைகளை அணுகவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்றைய போராட்டக் காட்சிகள்:

gudi-1

gudiyaththam

gudi-2

gudi-3

Wednesday, August 11, 2010

நெளிந்துபோன பாத்திரங்களுக்கு நடுவே வெறித்த பார்வையோடு நம் தந்தை அம்பேத்கரின் புகைப்படம்

.Ambedkar-Jayanti-20101

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் எழுதிய கட்டுரையைக் கீழே தருகிறேன்.நாளை 12.8.10 காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீடிழந்த மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற இருக்கிறது.இதுபோன்ற கொடுமைகள் நம் கண்முன்னால் அன்றாடம் நடந்து கொண்டிருக்க நாம் மௌன சாட்சிகளாக வாழ நேர்ந்துள்ளது பெரும் அவலம்.குறைந்தபட்சம் அவரவர் வழியில் இச்செய்தியைப் பரப்ப முயற்சிப்போம்.தார்மீக ஆதரவையேனும் அம்மக்களுக்குத் தெரிவிப்போம்.வாய்ப்புள்ள நண்பர்கள் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைச் சந்தித்தும் வரலாம் போராட்டத்திலும் பங்கேற்கலாம்.

தரைமட்டமான சமத்துவபுரம் ஒரு நேரடி ரிப்போர்ட் -கே.சாமுவேல்ராஜ்

நகரின் பிரதான பகுதிகளில் இருக் கிற ஏழைகளின் குடிசைகள் வில்லன் களால் இடித்துத் தள்ளப்படுவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்தி ருக்கிறோம். ஆனால் திரைப்படங்களை மிஞ்சுகிற காட்சி, மக்கள் வீடுகளை விட்டு தலைதெறிக்க வெளியேறி பார்த் துக் கொண்டிருக்கும் போதே பட்டப் பகலில் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்ட கொடூரம், வீதியில் வீசியெறியப்பட்ட மக்கள், என நடந்த நிகழ்ச்சிகளை விவ ரிக்கிறபோது அதிர்ச்சியில் நிலை குலைந்து போனோம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் 36வது வார்டு, மேல் ஆலத்தூர் சாலை யோரத்தில் வரிசையாக 35 வீடுகள். நூறு ஆண்டுகளைக் கடந்த குடியிருப்பு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகிய உரிமைகளுடன் 4வது தலைமுறையினர் அந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அருந்ததியர்கள், ஆதி திராவிடர்கள், லெப்பைப் பிரிவை சேர்ந்த இஸ்லாமி யர்கள் என ஒரு சமத்துவபுரமாகவே அந்த குடியிருப்பு இருந்துள்ளது. எல்லோருமே ஏழைகள், அன்றாடக் கூலிகள்.
சர்வே எண் 674ல் அமைந்துள்ள இந்த குடியிருப்பை ஒட்டியுள்ள நிலத்தை நில புரோக்கர் மொசைக் செல்வம் வாங்கி பிளாட் போடுகிறார். தனது பிளாட்டிற்கும் சாலைக்கும் இடையே உள்ள தரித்திர குடிசைகளை அகற்றிவிட்டால் பிளாட் பொன்முட்டையிடும். இது மொசைக் செல்வத்தின் கணக்கு. உடனே பாட் டாளி மக்கள் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி வருகிறார். வந்தவுடன் அமைச்சர் துரைமுருகனாரிடம் ஆசியும் பெற்றாராம். அவ்வளவுதான் அவருக்கு யானைபலம் வருகிறது. வார்டு கவுன் சிலர் பார்த்திபன் பக்க துணையாக வருகிறார்.
தலித் குடியிருப்பின் ஆண்களை கடத்தி வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டி வெற்றுப்பேப்பர்களில் கையெ ழுத்து பெற்று, வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின் வாரியமும் மின்னல் வேகத்தில் ஒத்துழைப்பு கொடுத் துள்ளது. ‘கரசேவைக்கு’ நாள் குறிக்கப் பட்டது. தலித் குடியிருப்பை நிர்மூலமாக் கிட அவர்கள் தேர்வு செய்த நாள் ஏப்ரல் 14, அதாவது டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம்.
அனைத்து துறைகளையும் கவ னித்துவிட்டு மொசைக் செல்வம் வகை யறா களம் இறங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சுமார் 300 அடியாட்கள், ஜே.சி.பி, புல்டோசர் பின்தொடர மொசைக் செல்வம், பார்த்திபன் வகையறா குடி யிருப்பில் நுழைந்துள்ளனர். அடியாட் களின் மதிய உணவிற்காக ஆடுகளை வெட்டி, அப்படியே இரத்தம் வடிகிற அரி வாள்களோடு வீதியில் வலம் வந் துள்ளனர். வீடுகளுக்கு முன்பிருந்த முருங்கை, வாழை மரங்களை ஒரே வெட்டில் சாய்த்து மக்களின் இரத்தத்தை உறைய வைத்துள்ளனர். குலை நடுக்கம் ஏற்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளி யேறி அடியாட்களின் கால்களில் விழுந்து மன்றாடிக் கொண்டிருக்கும் போதே ஜே.சி.பியும், புல்டோசரும் வீடுகளை நொறுக்கி சிதைத்தது. நான்கு தலைமுறை யின் உழைப்பு, கேட்பதற்கு நாதியற்று தெருவில் சரிந்தது. இடிபாடுகளுக் கிடையே எளியவர்களின் தட்டுமுட்டு சாமான்கள், குடிநீர் குழாய்கள் உடைத் தெறியப்பட்டன. சின்டெக்ஸ் தொட்டி தொலைவில் உள்ள சுடுகாட்டில் குப் புறக் கிடக்கிறது. வெளியேற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்காமல் தடுக்க அடி யாட்கள் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். வேலைக்குச் செல்ல அனுமதியில்லை. சைக்கிளில் விற்ப னைக்கு வந்த கம்மங்கூழ் மட்டுமே உணவு.
செய்தி தாமதமாக கிடைத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப் பான இடத்தில் தங்க வைத்துள்ளது. குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா மூன்று முறை மாவட்ட ஆட்சியரை சந் தித்து பேசியும் மாவட்ட நிர்வாகம் அசையவில்லை. 8.7.10 அன்று மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள். ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மற்றொருவர் பாது காப்பற்ற சூழ்நிலையில் பிரசவத்தை திகி லுடன் எதிர்நோக்கியுள்ளார். பதினேழு வயதிற்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் பரிதவித்து நிற்கிற காட்சி நம்மை பதற வைக்கிறது. வேலூர் மாவட்ட தோழர் களுடன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக் கச் சென்ற போது படுக்கையில் கிடந்த மூதாட்டி ‘நீ இங்கேயே இரு’ என எம்எல்.ஏ லதாவின் கைகளை பற்றி கண்ணீர் விட்டார். 36 குடும்பங்களுக்கும் கிடைப்பதைக் கொண்டு ஒரே சமையல். மர நிழலில் பாய், படுக்கை சுருண்டு கிடந்தது. சற்று தள்ளி ஒரு ஓரத்தில் நெளிந்துபோன பாத்திரங்கள். பாத்திரங்க ளுக்கு நடுவே வெறித்த பார்வையோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கைக் கோரியும், தலித் மற்றும் இஸ்லாமிய மக் களை மீண்டும் அதே இடத்தில் குடி யமர்த்தக் கோரியும், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகஸ்ட் 12 அன்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தவிருக்கி றது. தோழர்கள் பி.சம்பத், கே.சாமுவேல் ராஜ், ஜி.லதா எம்.எல்.ஏ, ஏ.நாராயணன், வி.குபேந்திரன், பி.குணசேகரன், என். ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களோடு பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வரு கிறோம்.
உத்தப்புரம், சிதம்பரம் கோவில் போராட்டங்களைப் பற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்னும் போர்வை யில் மார்க்சிஸ்ட் கட்சி கலகம் செய்வ தாக தமிழக முதல்வர் கருத்து தெரி வித்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, போராடுவது கலகம் என்றால், அதை நாங்கள் தொடர்வோம்.

Tuesday, July 27, 2010

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்-அழைக்கிறோம்

 நாடாளுமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும்

தமிழைப்

பயன்பாட்டு மொழியாக்கக் கோரிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட்-6,2010

மாலை-4 மணி : மெமோரியல் ஹால் எதிரே,சென்னை-சென்ட்ரல் அருகே

தலைமை

சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர்

பங்கேற்போர்

டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்

எஸ்.கே. மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்

ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

விடுதலை இராஜேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்

சு.வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

ஆர்.வைகை, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

பால் கனகராஜ், தலைவர், சென்னை பார் கவுன்சில்

பிரசன்னா, தலைவர், பெண்வழக்கறிஞர்கள் சங்கம்

சே.சு.பாலன் ராஜா, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

இரா.மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அ.குமரேசன், பத்திரிகையாளர்

மயிலை பாலு, பத்திரிகையாளர்

பிரம்மா, ஊடகவியலாளர்

தியாகச்செம்மல், ஊடகவியலாளர்

பிரளயன், நாடகவியலாளர்

பா.வீரமணி, ஆய்வாளர்

பிரின்ஸ், கல்வியியலாளர்

ந.ஸ்டாலின், சட்டம், முதுநிலை அம்பேத்கர் சட்டக்கல்லு ரி

ம.நா.குமார், எஸ்.எப்.ஐ, அமைப்பாளர்

மணிநாத், தலைவர், வடசென்னை

கி.அன்பரசன், செயலாளர், தென்சென்னை

நா.வே.அருள், செயலாளர், வடசென்னை

விடியல் கலைக்குழு, தென்சென்னை சக்திக்கலைக்குழு

போக்குவரத்து அரங்கம் வி பி சி கலைக்குழு

புதுயுகம் இசைக்குழு, பகத்சிங் இசைக்குழு, தமிழ்ஒளி இசைக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

வடசென்னை தென்சென்னை

நீதிமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 348ஆம் பிரிவு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்கிறது. சுதந்திர இந்தியாவில் இந்த நிலையை மாற்றிட அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் முடியும். அதனால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதே சட்டத்தின் உட்பிரிவு உயர்நீதிமன்றங்களின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் திகழமுடியும் என்கிறது. அதற்கு தமிழகச் சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்திட ஆளுநர் அதிகாரம் வழங்கமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியாயிற்று. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புரல்தானே? ஆனால் ஏன் இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட, மனுக்கள் தாக்கல் செய்ய, தமிழக அரசு மத்திய அரசிடம் வாதாடவேண்டும். போனது போகட்டும். இனியாவது வாதாடுமா?

நாடாளுமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 120 ஆம் பிரிவில் நாடாளுமன்ற அலுவல்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசலாம். ஆனால் அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பதிலளிக்கவேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாத ஒருவர் மத்திய அரசியல் அமைச்சராக செயல்பட முடியாது. இது பெரும் அநீதி. நமது நாட்டு நாடாளுமன்றத்தில் நமது மொழியில் பேச முடியாது. இது நமது சுயமரியாதைக்கு இழுக்கு. வாக்களித்து அனுப்பிய மக்களுக்கு அவமரியாதை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரவர் தாய்மொழியில் பேசவும் அதை உடனுக்குடன் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் இது எளிதான காரியமே. எவ்வளவு செலவாகிப்போகும்? ஆகட்டுமே. கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகிற பல்லாயிரம் கோடி பணத்தோடு ஒப்பிடும்போது இது வெறும் கொசுறு.

(மாநாட்டுக்கு 400 கோடிதமிழுக்கு…? நூலிலிருந்து)

________________________________________________________________________________________________________

உழவுத்தமிழனை

உழைப்புத்தமிழனை

நெசவுத்தமிழனை

பசித்த தமிழனை

தாழ்த்தப்பட்ட

சாதித்தமிழனை

சபிக்கப்பட்ட

சேரித்தமிழனை

மலைகளில் வாழும்

ஆதித்தமிழனை

மலங்களை அள்ளும்

வீதித்தமிழனை

கடலுக்குள் மூழ்கும்

உப்புத்தமிழனை

கரைகளில் வாழும்

குப்பத்தமிழனை

உலைக்களம் வேகும்

நெருப்புத்தமிழனை

செருக்களம் சாகும்

துருப்புத்தமிழனை

இறுக்கிடும் சங்கிலி

எவையோ அவைதான்

என்தமிழ்த்தாயை

இறுக்கிடும் தளைகள்

//தணிகைச்செல்வன்//

Wednesday, June 2, 2010

செம்மொழித்தமிழுக்கான செயற்பிரகடனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,மாநிலக்குழு

28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

mkumaran

22-05-2010 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான

கருத்தரங்கில் வெளியிடப்பட்ட

செம்மொழித்தமிழுக்கான செயற்பிரகடனம்

உலகின் ஆதிமொழிகளில் ஒன்றான நம் தாய்த்தமிழ் மொழியின் சிறப்புக்களை நாம் உணர்ந்ததைப் பார்க்கிலும் உலகின் பிற பகுதிகளில் வாழும் அறிஞர் பெருமக்கள் அறிந்து வியந்து இது தொன்மையான செவ்வியல் மொழி என்று நீண்ட காலத்துக்கு முன்னரே பாராட்டினர்.நமது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழி என அங்கீகரித்தது.பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாகத் திகழும் இந்திய நாட்டின் மைய அரசு எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உரிய அக்கறை செலுத்தும் ஒரு மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்காத வரலாற்றைக்கொண்டிருக்கிறது.அதன் காரணமாக 60களில் தமிழ் மண்ணில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமான வடிவம் எடுத்தது.அன்று தமிழர்கள் இந்தியால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினோம்.ஆனால் இன்று உலகமயச்சூழலில் ஆங்கிலத்தால் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் அழியும் அபாயம் சமீபித்து வருகிறது.யுனெஸ்கோவின் ஆய்வும் அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகின்றன.1967க்குப் பிறகு தமிழ் உணர்வையே மையமாகக் கொண்டு அரசியல் நடத்திய திராவிட இயக்கத்தார் தமிழ்நாட்டை ஆண்டு வந்தபோதும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பாதுக்காக்கப்பட்டுத் தமிழ் கைவிடப்பட்ட நிலையே தொடர்கிறது. கல்வியிலும் ஆட்சியிலும் நீதிமன்றங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் என எங்கும் தமிழ் என்பது எட்டாக்கனவாகவே நீடிக்கிறது.

செம்மொழித்தமிழுக்காக ஓர் உலக மாநாட்டைத் தமிழக அரசு நடத்துகின்ற இவ்வேளையில் தாய்த்தமிழைப் பாதுகாத்திடவும் நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் மைய அரசும் மாநில அரசும் மக்களாகிய நாமும் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளைத் தொகுத்து இப்பிரகடனத்தை தமிழ்ச்சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறோம்.இப்பிரகடனத்தின் ஒவ்வொரு வாசகத்தையும் நடைமுறைப்படுத்திடத் தொடர்ந்து போராடத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்நாளில் தமிழின் மீது ஆணையிட்டு உறுதியேற்கிறது.தமிழின் பேரால் வெற்று முழக்கங்களை எழுப்பாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட விரும்பும் அத்துணை தமிழ் நெஞ்சங்களையும் இச்சமரில் எம்மோடு தோள்கொடுக்க வருமாறு இந்த நாளில் திறந்த மனதோடு அறைகூவல் விடுக்கிறோம்.

1.தமிழ்வழி படித்தோருக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குக.

2.மருத்துவப்படிப்பையும் தமிழ் வழியில் கொண்டுவருக.

3.தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் பிரிவு ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வேண்டுமென்றால் அவ்வப்போது அரசாணை வெளியிட்டுப் பயன்படுத்திகொள்ளலாம் என்று சொல்கிறது.தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தின் இதயம் போன்ற இப்பகுதியில் ஆங்கிலம் ஆட்சி செய்து வருகிறது.எனவே இச்சட்டப்பிரிவில் தமிழே விதியாகவும் ஆங்கிலம் விதிவிலக்காகவும் இருக்கும்படியான உரிய திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

4.எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் உடனுக்குடனான மொழிபெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்க.

5.தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்குமொழியாகிட நடுவண் அரசே அனுமதி வழங்கு

6.தமிழ் ஆட்சிமொழி குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு நிர்வாகத்திலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்துக.

7.மத்திய அரசுடன் தமிழக மக்கள் தமிழில் கடிதப்போக்குவரத்து நடத்திட ஏற்பாடு செய்க.

8.வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்கிற அரசாணையை உறுதியுடன் அமுலாக்குக.

9.தொலைக்காட்சி மற்றும் நேரலை அலைவரிசைகளில் அன்றாடம் சிதைக்கப்படும் பழகுதமிழைக் காத்திட நல்ல தமிழ் ஒலித்திட- அந்நிறுவனங்களும் தமிழக அரசும் தமிழ் உணர்வுடன் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

10.உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கும் இப்போதாவது தமிழகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாறுகளை அறிவியல் பார்வையுடன் உரிய அறிஞர்களைக் கொண்டு எழுதிட ஏற்பாடு செய்க.

11.பிறமொழிகளிலிருந்து பல்துறை சார் நூல்களை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட (முன்னர் தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம் செய்ததுபோல) முறையான ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.

12.தமிழகத்தின் கோவில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்திட உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்திட வேண்டும்

13. மாறிவரும் காலசூழலுக்கும் கணிணிக்கும் ஏற்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உரிய மொழி அறிஞர்களைக்கொண்ட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14.மொழியைப் படைத்தவர்களான மக்கள் மொழி உணர்வு அற்றவர்களானால் அம்மொழியை யாராலும் காக்க முடியாது. தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ் வீடுகளில் தமிழ்தான் இல்லை என்கிற நிலையை நோக்கி வேகமாகச் செல்லும் ஒரு சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது.நம் பிள்ளைகளைத் தமிழ் உணர்வோடு வளர்த்திடவும் நம் வீடுகளில் தமிழ் முழங்கிடவும் ஆனதெல்லாம் செய்திட வேண்டுமெனத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் வேண்டுகோள் வைக்கிறோம்.

இவற்றோடு.... .

1.சங்க இலக்கியங்கள் ,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,நவீன இலக்கியங்கள் என மிகப்பெரும் பாரம்பரியமும் செழுமையும் மிக்க மொழி தமிழ் மொழி..நீண்ட நெடுங்காலமாகவே இச்செல்வங்கள் யாவும் பண்டிதர்கைச் சரக்குகளாகவே நீடிக்கின்றன.எளிய வாசகனும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடன் உரிய விளக்கங்களுடன் இவை யாவும் அரசின் செலவில் மிகமிகக் குறைந்த விலையில் நல்ல தாளில் அச்சிட்டு அரசே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். .

2. தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்கள் ஊடாக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.

3.அரசு நடத்தும் இசைப்பள்ளிகள்,இசைக்கல்லூரிகளில் அவ்வப்பகுதியைச்சேர்ந்த எல்லா நாட்டுப்புற இசை வடிவங்களும் வாய்ப்பாட்டும் சேர்க்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அங்கு வருகைதரு பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

4.நீண்ட நெடிய கூத்து மரபுகொண்ட நம் தமிழ்மொழியில் முறையான ஒரு நாடகத்தமிழ் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை.அதற்கான முயற்சிகளை அரசு துவக்க வேண்டும்.

5.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்குமே நாடகத்துறை என்பது இல்லை.அங்கும் ஆய்வு நிலையில் மட்டுமே உள்ளது.உருப்படியான பாடநூல்களும் இல்லை.நாடகப்பள்ளி ஒன்றினையேனும் உருவாக்குவதும் எல்லாக்கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் நாடகம் இணைக்கப் படுவதும் அவசியம்.கூத்து மற்றும் நாடகப்பயிலரங்குகள் தமிழ்ப் பாடத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

6.வீதி நாடகங்கள் என்னும் புதிய மக்கள் கலை வடிவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் புதிய நாடகங்கள் தயாரிப்பதற்கான ஆதரவை வழங்குவதற்குமான நிரந்தர ஏற்பாடு ஒன்றினை அரசு உருவாக்க வேண்டும்.

7.இழிசனர் வழக்கென்று பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வாய்மொழி இலக்கியங்களாக உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் பள்ளி மற்றும் கல்லூரித் தமிழ்ப்பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.இதுவரை தொகுக்கப்படாத நிலப்பரப்புகளில் இவற்றைத் தொகுத்திட அரசின் செலவில் தமிழ் கற்ற ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.

8.பன்னெடுங்காலமாக மேல்தட்டு வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நாட்டுப்புறக்கலைகள் காலம் காலமாக உழைப்பாளி மக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவை.ஆதரிப்பார் யாருமின்றி அழிந்துபோன நாட்டுப்புறக்கலைகள் எத்தனையோ.நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ஒன்றைத்துவக்கி இக்கலைகளும் இலக்கியங்களும் அழியாமல் பாதுகாக்க இம்மாநாட்டை ஒட்டியேனும் அரசு சிந்திக்க வேண்டும்.

9.முழுமையான தமிழ்வழிக்கல்வி அதிலும் அருகமைப்பள்ளி என்பதை நோக்கியும் தமிழைத்தாய் மொழியாகக்கொண்ட குழந்தைகள் தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் கல்வியை முடிக்க இனி வாய்ப்பில்லை என்கிற நிலையை நோக்கியும் தமிழகம் சென்றிட அரசியல் உறுதிமிக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் மொழிப்பாடங்களாக இருக்கலாம்.

10. தமிழ்ச்சமூகம் மிக நீண்ட ஆழமான பண்பாட்டு வரலாறு உடையது.மானிடவியல் ஆய்வுகள் மூலம் அவற்றை வெளிக்கொணர வேண்டும். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் மானுடவியல் அறிஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் மானுடவியல்துறை உடனடியாகத் துவங்கப்பட வேண்டும்.

11.தேசிய இயக்கம்,சுயமரியாதை இயக்கம்,திராவிட இயக்கம்,பொதுவுடமை இயக்கம்,தலித் இயக்கம்,பெண்ணிய இயக்கம் என இவை ஒவ்வொன்றும் தமிழுக்காற்றிய பங்கு பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்த வேண்டும்.

12.ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் உள்ளிட்ட அகராதிகளின் நிலை குறித்து இந்த நேரத்தில் நினைத்துப்பார்ப்பது அவசியம்.1960களில் பல்கலைக்கழக மான்யக்குழுவின் நிதி உதவியோடு சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிக்குப் பிறகு அரசு சார் நிறுவனரீதியாக எந்த முயற்சியும் இல்லை.அந்த ஒரு அகராதியும் இன்னும் தற்காலப்படுத்தப்படாமலே உள்ளது.தமிழக அரசு இது தொடர்பாக ஒரு பல்துறை அறிஞர் குழுவை போதிய நிதி ஆதாரத்துடன் நியமித்துப் பணிகளைத்துவக்க வேண்டும்.

13. வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழின் மொழியியல் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவையாகும்.சில தனிப்பட்ட ஆளுமைகளின் கடும் உழைப்பால் சில வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வந்துள்ளன.அரசு சார் நிறுவனங்களோ பல்கலைக் கழகங்களோ இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை.உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரும் செலவிலான நிகழ்வுகள் நடக்கும் போதேனும் இதுபற்றிக் கவலை கொண்டு தமிழகம் முழுவதும் வட்டார வழக்குகளை அகராதிகளாகத் தொகுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்ய வேண்டும்.

14. 1960இல் தமிழக அரசு வெளியிட்ட கலைக்களஞ்சியத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் இத்துறையில் செய்யப்படவில்லை.60க்குப்பிறகு அதிவேகப்பாய்ச்சலில் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.ஆகவே தற்காலப்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம் உடனடியான தேவையாகும். தொடர்ச்சியாக துறைவாரியான கலைச்சொல் அகராதிகளை அரசு முன்னின்று முயன்று வெளிக்கொணர வேண்டும்

15.கணிணிக்கான பொதுவான தமிழ் எழுத்துரு என்பது இன்னும் கனவாகவே உள்ளது.கணிணிக்குப் பொருத்தமான மொழியாக நம் தமிழ் இருப்பது நமக்குப் பெருமைதான்.ஆனால் ஒரு பொதுவான தமிழ் விசைப்பலகையைத் தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.

16.மருத்துவம்,பொறியியல் போன்ற தொழில்நுட்பத்துறை சார் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.புதிய கலைச்சொல் ஆக்கங்களில் அவர்கள் ஈடுபட இது அவசியமல்லவா?இத்தகு கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்களை நியமிப்பதும் அவசியமாகும்.

17.புதிதாக அனுமதிக்கப்படும் மேனிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் தமிழாசிரியர்களை நியமிக்கத் தமிழக அரசு விதித்துள்ள தடையாணையை நீக்க வேண்டும்.

Tuesday, March 17, 2009

வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக

வலைத்தள அரசியல்

எஸ்.ராமகிருஷ்ணனின் தீராநதி கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையை வாசித்துக்
கருத்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.
நண்பர் புண்ணியா எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயமோகன் இதே தீராநதியில் எம்மைப் பற்றி மோசமாக எழுதியபோதெல்லாம் கோபப்படாத நீங்கள்
இப்போது எஸ்ரா எழுதியதற்கு மட்டும் ஏன் கோபப்படுகிறீர்கள் ? என்பது கேள்வி.
முதலில் எஸ்ரா கட்டுரையைப் படித்து நான் கோபப்படவில்லை.
அதிர்ச்சியும் வேதனையும்தான் அடைந்தேன் என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

காகம் கா..கா.. என்றுதான் கரையும்.கிளி கீ.. கீ.. என்றுதான் கத்தும்.
காகத்தின் கரைச்சலுக்கு நாம் கோபப்பட முடியாது.
அது பிறந்ததே அதற்காகத்தான்.பிறப்பிலிருந்தே அது அப்படித்தான் கத்திக்கொண்டிருக்கிறது.

கிளி கீ..கீ.. என்று கத்தாமல் கா..கா என்று கத்தும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.
அதுதான் வேதனை.
எஸ்.ராமகிருஷ்ணனும் சு.வெங்கடேசனும் பத்தாண்டுகளுக்கு மேலாக நெருக்கமான
நண்பர்கள்.தன்னுடைய கருத்தை எஸ்ரா இன்னும் எத்தனையோ வழிகளில்
வெளியிட்டிருக்க முடியும்.இந்த வழியும் இந்த மொழியும்தான் வேதனை தருகிறது.
அவர் வைக்கும் விமர்சனம் எதுவாக இருந்தாலும்
நாம் வரவேற்கத்தான் செய்வோம்.உரிய பதிலும் அளிப்போம்.

நிற்க.

பாரதியை பார்ப்பனச் சிமிழுக்குள் அடைக்க நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக
நாங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.படைப்பையும் படைப்பாளியையும்
அவர்கள் பிறந்த-வாழ்ந்த- காலத்தில் - காலச்சூழலில் வைத்துப் பார்க்கத்
தவறுவதால் வரும் பார்வைக்கோளாறுதான் இது.

இன்னும் சிலபேர் வம்படியாக இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.
தூங்குவதுபோல் நடிப்பவர்கள் அவர்கள்.அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
வினவு வலைத்தளம் நான் பார்த்ததில்லை. இனி பார்க்கிறேன்.

பாரதி எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறான்.இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
’விசையுறு பந்தினைப்போல் உள்ளம்  வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் ’என்கிற ஒரு
வரி - இயக்கம் சார்ந்து செயல்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை எழுச்சி தருகிறது.

சண்டாளச் சாமி சொல்ல வருவது எனக்குப் பிடிபடவில்லை.

தீராநதியில் இரண்டு இதழ்களுக்கு முன்னால்
நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்.பா.செயப்பிரகாசம்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாதமி
விருது கிடைத்ததைப் பாராட்ட வந்தது போன்ற ஒரு ஹோதாவில் எமது
இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார்.

நாங்கள் ஏதோ சில பிரச்னைகளில் மௌனம் சாதிப்பதாக
எழுதிக் கோபப்பட்டிருந்தார்.நாங்கள் எந்தப் பிரச்னையிலும் மௌனம் சாதித்ததாக
சரித்திரம் இல்லை.எங்கள் நிலைபாடு  பிறருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
முல்லைப்பெரியாறு, நந்திகிராம் முதல் இலங்கைப்பிரச்னை வரை எங்கள் கருத்தை
தொடர்ந்து  உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம்
விநியோகிக்கிறோம்.பா.செயப்பிரகாசம் தன்னுடைய நக்சல் நிலைபாட்டில் நின்று
நாங்கள் ஏன் பேசவில்லை என்றுதான் கோபப்படுகிறோர்.

என்ன சார் செய்யிறது? எங்களுக்கென்று சொந்த மேளமும் தாளமும் இருப்பதால்
உங்கள் இசைக்கு ஆட வேண்டிய அவசியம் எங்களுக்கு வரவில்லையே?
அது சாத்தியமானதும் இல்லையே?எங்கள் தாளத்துக்கு நீங்கள் ஆடுவீர்களா?

பொருட்படுத்தத்தக்க விமர்சனங்களுக்கு நிச்சயம் நாம் பதில் சொல்லுவோம்.
அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்.

தமிழ் வீதிக்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

ச.தமிழ்ச்செல்வன்

Thursday, March 12, 2009

தெருமுனை

koozh 

ச.தமிழ்ச்செல்வன் என்பது எனக்கு அப்பா அம்மா வைத்த பெயர் என்று சொல்லும்போதே அப்போது என் அம்மாவிடம் அப்பா கருத்துக்கேட்டிருப்பாரா என்கிற சந்தேகமும் கூடவே வருகிறது.ஆனால் என் அம்மாவும் ஒரு கலை இலக்கியவாதியான மதுரகவி பாஸ்கரதாசின் மகள் என்பதால் ஒருவேளை கலந்து பேசிக்கூட ஜனநாயகமாக முடிவெடுத்திருக்க வாய்ப்புண்டு.அம்மா இப்போது இல்லை.இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகவே என் அப்பா பாஸ்கரதாஸ் மகளைப் பெண் கேட்டாராம்.

1954இல் நான் பிறந்த காலம் திராவிட இயக்கம் அதன் அழகுகளோடும் அர்த்தத்தோடும் இயங்கிக்கொண்டிருந்த காலம்.என் அப்பாவும் அதில் ஈடுபாடு கொண்ட இளைஞராக இருந்தாராம்.திராவிட இயக்கம் தமிழை ஒரு அணி திரட்டும் சாதனமாக சக்தியுடன் பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் அது.ஆகவே என் பெயர் தமிழ்ச்செல்வன் ஆனது.

திராவிடப்பாரம்பரியம் என் பெயரோடு இருப்பதாலோ என்னவோ இன்றைக்கும் தினசரி மைக்கோடு வாழும் கதி எனக்கு வாய்த்திருக்கிறது.மைக்கும் திராவிட இயக்கமும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்து கிடந்தது வரலாறு அல்லவா?வாரத்தில் நாலு நாளாவது தமிழகத்தின் ஏதாவது ஒரு வீதியில் மைக் முன் நின்று ஏதேனும் ஒரு உரை ( வரவேற்புரை, வாழ்த்துரை,நன்றியுரை,அறிமுக உரை,சிறப்புரை,கருத்துரை,திறப்பு உரை key note address என்பதை உண்மையில் திறப்புக் குறிப்பு உரை என்றுதான் சொல்ல வேண்டும்.-எத்தனை எத்தனை உரைகளடா) ஆற்றும் ஓர் அன்றாட வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது.

30 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று ஜம்பமாக அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்பட்டாலும் எத்தனை கதை என்று எண்ணிப்பார்த்தால் 32 கதைதான் தேறுகிறபடியால் அதைச்சொல்லிக்கொள்வதில்லை.அந்த 32இல் ஒரு கதையான வெயிலோடு போய் கதையை இயக்குநர் சசி ‘பூ என்ற திரைப்படமாகத் தயாரித்து வெளியிட இப்போது பூ கதாசிரியர் என்றும் மூலக்கதையாசிரியர் என்றும் (உண்மையில் எனக்கு மூலப் பிரச்னை அவ்வப்போது உண்டு என்பதால் )அறிமுகப்படுத்தப்படும்போது கொஞ்சம் நகட்டி உட்கார்வது தன்னியல்பாக நடக்கும்.

பேசுவது எழுவதில் எதையும் மறைப்பது தப்பு என்று சின்ன வயதிலேயே தலையில் ஏறி விட்டதால் என்னத்தையும் எழுதி அவ்வப்போது கொஞ்சம் பேச்சு வாங்குவதும் உண்டு.செல்போன் வந்த புதிதில் தேவையோ இல்லையோ எல்லோரும் செல் வாங்கியது போல blog என்கிற இந்த அயிட்டம் வந்த பிறகு ஒரு எழுத்தாளனாக இருந்துட்டு இப்படி blog ஆரம்பிக்காம இருக்கலாகுமா என்று அறிந்தவர்கள் கேட்க இந்தத் தமிழ்வீதியில் நின்று உங்களோடு பேசிக்கொண்டிருக்கலாச்சு.

தெருவும் தெருப்புழுதியும் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடித்தமானவை.உலகத்தின் மாற்றங்கள் எல்லாம் தெருவில்தான் நடந்தது.தெருவில் ஒளிவு மறைவு இருக்க வாய்ப்பில்லை.அடைத்துக்கொள்ளக் கதவில்லை.தெருமறிச்சான்கள் கட்டப்பட்டாலும் அவை தகர்க்கவும் படுகின்றன.தெருவில் மாற்றங்களைக் கொண்டுவருபவர்களாக எப்போதும் புழுதி படிந்த அந்த உழைக்கும் மனிதர்கள்தான் இருந்துள்ளார்கள்.

ஆகவே.. என் இனிய blog சமூகமே இங்கேயும் கொஞ்சம் தெருப்புழுதியைக் கொண்டுவர முயற்சிப்போம் என்று கூறி தமிழ்வீதிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.நன்றி.வணக்கம்.