tag:blogger.com,1999:blog-3971458731441314896.post5595693371110186012..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: யார் சிரித்தால் தீபாவளி?ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-14034319383375133662010-02-02T06:48:56.860-08:002010-02-02T06:48:56.860-08:00யார் சிரித்தால் தீபாவளி? சிவகாசியில் வருடாவருடம் ப...யார் சிரித்தால் தீபாவளி? சிவகாசியில் வருடாவருடம் பல உயிர்களை குடித்துவிட்டு,பலரது வாழ்வை பறித்துவிட்டு,இன்பமாக தீபாவளியை கொண்டாடுவது நாம் மட்டுமே! நம் கண்ணுக்கு தெரிந்த இந்த கவிதாவை போல எத்தனையோ கவிதாக்கள் உள்ளனர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள நம்முடைய முதலாளித்துவ நாட்டில் தொழிலாளிகளின் உயிர் துளி அளவேனும் மதிக்கப்படுவதில்லை.அவர்களுடைய அராஜகம் ஒழிக்கபடாவிடில் இது போன்ற எத்தனையோ கவிதாக்கள் வாழ்க்கையை இழந்திடும் அபாயம் வெகு தூரத்தில் இல்லை.Bharathihttps://www.blogger.com/profile/07039183507276315828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-42068036759204873932009-10-14T23:13:59.491-07:002009-10-14T23:13:59.491-07:00Vaanakkam.
Arasiyal rethiyaga 30 andukaluku mela...Vaanakkam. <br /><br />Arasiyal rethiyaga 30 andukaluku melaga poradium matram varavilai enna naam arinthum arthalukaga poradalm thavira, ayutham enthiya poratam illamal matrum varum enbathu manathirku erpudaiyathai illai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-53032128847740257932009-10-14T19:58:09.347-07:002009-10-14T19:58:09.347-07:00பல தடவை விபத்துப்பார்க்கிற ஆர்வத்தில் கடந்துபோனாலு...பல தடவை விபத்துப்பார்க்கிற ஆர்வத்தில் கடந்துபோனாலும், வங்கியில் பணம் வாங்க நீள்கிற பல கரிக்கைகள் பார்த்தாலும்.<br />அழுகையை அடக்க முடியவில்லை இந்தப்பதிவை படித்ததும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-87072839471984734252009-10-10T11:36:28.279-07:002009-10-10T11:36:28.279-07:0070களில் "பூ" போட்ட பாவாட தாவாணி இன்னிக்க...70களில் "பூ" போட்ட பாவாட தாவாணி இன்னிக்கு "பூ" போட்ட சுடிதாரா மாறியிருக்கு அவ்வுளதுதான்......அவுக வாழ்க்கையில வேறென்னமும் மாறுனதா தெரியல, இன்னமும் தூக்கு சட்டியில பழய சோத்த கொண்டுட்டு போறத பாக்கயில என்னென்னமோ தோனுது.<br /><br />சார் நீங்க இவுகள பத்தி எழுதுறப்ப அதுல ஏதோ ஒரு ஈரம் இருக்கு.<br /><br />ஏனோ தெரியல தீவாளிக்கு வேட்டு போட்டு பதனஞ்சு வருசமாச்சு, இனியும் போடப்போறதுல்ல அந்த மட்டுலும் நான் பெரும பட்டுக்கலாம்.<br />காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-34756670828495780402009-10-10T10:36:13.584-07:002009-10-10T10:36:13.584-07:00பின்னூட்டம் இட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....பின்னூட்டம் இட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கடைசியாக எழுதிய ’வாக்குமூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை.நீதிபதியாக அந்த மேடைக்குப் போவதற்கு முன்பு எமக்கு இவ்விபத்துகள் பற்றித் தெரியாதது போல எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.அது தவறு.1970 களில்லிருந்து நான் இப்பிரச்னையின் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறேன்.என் உறவுக்காரக் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.சி.ஐ.டி.யு நீண்ட காலமாக சிவகாசியில் பல்வேறு போராட்டங்களை பட்டாசுத் தொழிலாளிகளுக்காக நடத்தி வருகிறது.இதுவரை நிவாரணம் என்று பெற்றுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்குப் பின்னாலும் சி.ஐ.டி.யு அல்லது மாதர்சங்கம் நின்றுள்ளது.பொது விசாரணை என்கிற வடிவத்தில் இது முதல் முறை.அவ்வளவே.நிற்க.70களில் பட்டாசு விபத்து பற்றிய அதிர்வுடன் எனது குரல்கள் கதை வந்தது.இப்பகுதியைச் சார்ந்த படைப்பாளிகள் லட்சுமணப்பெருமாள்,மாதவராஜ்,காமராஜ் என எல்லோருமே தம் படைப்புகளில் பட்டாசு வாழ்க்கை பதிவாகியுள்ளது.ஒரு குறும்பட முயற்சியிலும் மாதவராஜ் குழுவினர் உள்ளனர்.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-54016022107832250802009-10-09T22:08:19.965-07:002009-10-09T22:08:19.965-07:00//இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அ...//இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சேர்ந்து இக்கொடுமைகள் குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி சிவகாசியில் கடந்த 30-8-09 அன்று ஒரு பொதுவிசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.பொது விசாரணையின் நீதிபதிகள் குழுவில் ஒருவனாக நானும் மேடையில் இருந்தேன்../இப்படித்தான் ஒவ்வொன்றும் ஏதோ ஆகிவிடுவதைபோல ஆளுக்காள் ஆள்ப் பிடித்து கத்திக்கூப்பாடுபோட்டு மாறிமாறி மாலைகள் போட்டு எல்லாப்பிரச்சனகளும் இந்தாபார் கொன்று தொலைக்கிறோம் என்று பந்தா காட்டி கடைசியில் வந்த மக்களை ஏமாற்றி அரசியலாளர்களுடன் சேர்ந்து கொட்டமிடும் பேர்வழிகளை பார்ர்த்தும் கேட்டும் சலித்துப்போய் விட்டது. சிவகாசிப் பிரச்சனை என்பது இன்று நேற்றைய பிரச்சனையல்ல.நீதிபதிகளாக உங்களைபோடுவதற்குமுன்னே பலவருடங்களாகப் பேசப்பட்டும் வாதிக்கப்பட்டும் கண்டும் காணாமல் போனதற்கு அரசியல்வாதிகள் உருவாக்கிய சதிவலைகள் தான் முக்கிய காரணம். இது சகலருக்கும் தெரியும் ஆனால்சப்ம்பந்தப் பட்ட அரசியலாளருடன் தின்று குடித்துப் படுத்துத் தூங்கி விட்டு விசாரணை நடத்துகின்றோம் நிவாரணம் கொடுக்கப்பண்ணுகின்றோம் என்றெல்லாம் கரணம் அடிப்பது இனி எடுபடாது. மக்கள் விழிக்கத் தொடங்கி விட்டார்கள்.<br />ரமோனாவாக்குமூலம்https://www.blogger.com/profile/10977643318065399896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-50601435282591327492009-10-07T22:55:16.022-07:002009-10-07T22:55:16.022-07:00வெளிநாடுகளில் வீடுகளிலோ, தெருக்களிலோ பட்டாசு வெடிக...வெளிநாடுகளில் வீடுகளிலோ, தெருக்களிலோ பட்டாசு வெடிக்க முடியாது. அரசாங்கம் ஒதுக்கும் பொதுவான இடங்களில், குறித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கிறார்கள். அப்படிப் பட்டாசு வெடிப்பதற்கே பாதுகாப்பு தருகிறபோது, பட்டாசு தயாரிப்புக்கு இங்கு இருக்கும் சட்டங்களும் பாதுகாப்பற்ற சூழலும் வேதனை தருகிறது. இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. <br /><br />இருபது ஆண்டுகளுக்கு முன்பு துளிரில் வந்த பிரேமாவின் கதையைப் படித்த பின்பு எங்கள் வீட்டில் பட்டாசு வாங்குவதை நிறுத்தி விட்டோம்.TAMILSUJATHAhttps://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-13906964880667053562009-10-07T05:53:58.251-07:002009-10-07T05:53:58.251-07:00//பதிவிற்கு யார் சிரித்தால் தீபாவளி என்று தலைப்பு ...//பதிவிற்கு யார் சிரித்தால் தீபாவளி என்று தலைப்பு உள்ளது. நரகாசுரர்கள் யார் என்றும் துணைத் தலைப்பிடலாம். வேறு யார், நாம் தான்.//<br /><br />இதன் மூலம் என்ன கூற வருகிறீர்கள்? அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி பட்டாசு கொளுத்தும் மக்களை நரகாசுரர்கள் என்கிறீர்கள். ஆக தீபாவளி கொண்டாடும் நீங்கள் உள்ளிட்ட மக்களைத் திட்டுகிறீர்கள் உங்கள் கோபத்தில் நியாயமிருக்கிறது. ஆனால் தப்பாக உதாரணம் தருகிறீர்களே?Kavin Malarhttps://www.blogger.com/profile/01686127294819474989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-16108894105559989862009-10-07T05:07:29.947-07:002009-10-07T05:07:29.947-07:00யார் சிரித்தால் தீபாவளியை வாசித்த போது யார் சிரிக்...யார் சிரித்தால் தீபாவளியை வாசித்த போது யார் சிரிக்க இந்த தீபாவளி என்ற கேள்வி எழுகிறது.<br /><br />இத்தனை அவலங்களையும் வருடா வருடம் சந்திக்கிற போதும், வெடிகளின் விற்பனை டாஸ்மாக் விற்பனையைப் போன்றே உயர்ந்து கொண்டிருப்பதை யாரிடம் சொல்ல?Acu Healer.UMAR FAROOK.Ahttps://www.blogger.com/profile/15177393687833932708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-40452103765173041492009-10-07T03:07:53.102-07:002009-10-07T03:07:53.102-07:00அன்பு தமிழ்ச்செல்வன்,
தங்களின் யார் சிரித்தால் தீ...அன்பு தமிழ்ச்செல்வன்,<br /><br />தங்களின் யார் சிரித்தால் தீபாவளி, என்னை வெகுவாக பாதித்தது. பட்டாசுத் தொழில் மட்டுமே அல்லாது நிறைய தொழிற்துறைகள் இது போல் வீட்டுத் தொழிலாளர்கள் என்ற கான்செப்டில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. பட்டாசின் வீர்யம், பாதிப்புகள், வெளிப்படையானவை, வெளிச்சமானவை. பட்டாசுத் தொழிற்சாலைகளும் எந்தவிதமான தொழிற்சாலை சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டிருக்கின்றன. மிகக்குறைவான தொழிற்சாலைகளே, தேவையான உரிமம் பெற்று, எல்லா பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளையும் பின் பற்றி கட்டப்படுகின்றன. பெரும்பாலான பட்டாசு தயாரிக்கும் இடங்கள் வாடகைக்கு பிடிக்கும் இடத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து, அதன் அடியில் தற்காலிகமாக தொழிற்தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகின்றன, போதிய கழிப்பிடங்கள் இருக்காது, போதிய தீயனைப்பு கருவிகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் அதைப்பற்றிய பயிற்சி இருக்காது. அரசுத்துறையில் இருந்து ஆய்வுக்கு வருபவர்களின் தேவையே வேறு. அவர்களுக்கு தீபாவளிப்பரிசாக கிடைக்கும் பொட்டலங்களில் நம் சகோதர, சகோதரிகளின் ரத்தம் தோய்ந்த விரல் ரேகைகளை பதிந்திருப்பதை, படிக்கத் தெரியாத தற்குறிகள். <br />குறித்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாத காரணத்தினாலும், உற்பத்திச் செலவுகளை குறைப்பதற்காகவும் இந்த பட்டாசுத்திரிகள் வீடுகளில் உள்ள விளக்குத்திரிகளில் பொருத்தப்படுகிறது. இது பட்டாசுத்தொழிலின் இதர பயங்கரங்கள் ரசாயனத்தில் புழங்குபவர்களுக்கு ஏற்படும் தொழில் சார் அபாயங்கள் இன்னும் கொடுமை, பிறக்கின்ற குழந்தைகள், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், ரசாயனக்கழிவினால் ஏற்படும் சுற்றுச்சுழல் பயங்கரங்கள் என்று வருங்காலத்தையே பட்டாசுக்குள் அடைத்து கொளுத்தும் முனைப்புகள்.<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-74715058620872911982009-10-07T00:28:04.719-07:002009-10-07T00:28:04.719-07:00தெரியாத விஷயமல்ல என்றாலும், அறியாத தகவல்கள் அல்ல எ...தெரியாத விஷயமல்ல என்றாலும், அறியாத தகவல்கள் அல்ல என்றாலும், நவீன சமூகத்தின் கொண்டாட்டங்களின் வேர்களில் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ என்ற குரல் வேதனை நிரம்பியது. <br /><br />'ஹிபாகுஷா'க்கள் என்று அழைப்பது தலைமுறை தலைமுறையாய் தொடரும் பாதிப்புகளினால் தான். இங்கும் கூட அப்படி ஒரு அவஸ்தை வேறு வழியில் தொடர்கிறது. நீங்கள் யோசிப்பது போல் சிவகாசி விபத்தில் இப்படி ஊனங்களைச் சுமந்து திண்டாடுவோர்க்கு ஒரு பெயர் வைக்கலாம் தான். ஆனால் எப்போது நிறுத்தப் போகிறோம் இத்தகைய கொடுமைகள் நிகழ்வதை ? <br /><br />பதிவிற்கு யார் சிரித்தால் தீபாவளி என்று தலைப்பு உள்ளது. நரகாசுரர்கள் யார் என்றும் துணைத் தலைப்பிடலாம். வேறு யார், நாம் தான். <br /><br />மீண்டும் ப்ளாக் உலகிற்கு மீண்டது நல்ல விஷயம். தொடர்ந்து எழுதுங்கள். <br /><br />எஸ் வி வேணுகோபாலன்venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-72777301703017618502009-10-06T23:12:30.672-07:002009-10-06T23:12:30.672-07:00உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன், பாருங்கள்.உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன், பாருங்கள்.superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-32334432540012705382009-10-06T09:55:00.740-07:002009-10-06T09:55:00.740-07:00உருக்கமான இடுகை... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லைஉருக்கமான இடுகை... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-5997153161417471352009-10-06T08:16:33.465-07:002009-10-06T08:16:33.465-07:00"பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாரா..."பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள ஒரு சமூகத்தில் என்னதான் நடக்காது? தொழிலாளிகளின் உயிரோடு விளையாடும் முதலாளிகளும் அதிகாரிகளும் என்ன தண்டனையும் பெறத்தகுதியானவர்கள்தான்.ஆனால் அவர்கள் எப்போதும் நிம்மதியாகவும் செல்வச்செழிப்போடும்தான் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"<br /><br /><br /><br />"சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்று ஒரு பெயர் உண்டு என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பொருத்தமான பெயர்?"<br /><br /><br />உண்மையிலேயே முகத்தில் அறையும் யதார்த்தம் தான். <br /><br />நிச்சயமாக இந்த தீபாவளிக்கு வெடி வாங்க எனக்கு மனமில்லை....<br /><br />இத்தகைய கள ஆய்வுக்கான முன்முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.pavithrabaluhttps://www.blogger.com/profile/13922989516384041973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-29948999848807877562009-10-06T06:56:53.121-07:002009-10-06T06:56:53.121-07:00வணக்கம் தோழரே!
நான் ஏப்ரல் மாத சூரியனை பார்த்து ...வணக்கம் தோழரே!<br /><br /> நான் ஏப்ரல் மாத சூரியனை பார்த்து பார்த்து போரடிவிட்ட்து.<br /><br />மீண்டும் எழுத துவங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!!<br /><br />//சிஐடியுவின் தலைவர் தோழர் டி.கே.ரெங்கராஜன் கவிதாவைப் பக்கத்தில் அழைத்து தைரிய்மாக இரு பாப்பா நிச்சயமாக உனக்கு நிவாரணம் கிடைக்கப்பாடுபடுவேன் //<br /><br />ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார் தோழர். டிகேஆர்.அவர் எடுத்த மிக முக்கிய பிரச்சனை மத்திய அரசு மூடிய தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மீண்டும் திறக்கும் வரை போராடியிருக்கிறார்.இதிலிருந்து தான் மற்ற கட்சிகளிடமிருந்து இடதுசாரிகள் தனித்துவம் பெறுகிறார்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-22235519355927493152009-10-06T03:32:29.201-07:002009-10-06T03:32:29.201-07:00எப்போதுமே உண்மைகள் தொந்தரவு செய்யக் கூடியதாகவும், ...எப்போதுமே உண்மைகள் தொந்தரவு செய்யக் கூடியதாகவும், அதிர்ச்சியானதாகவுமே நம் சமூகத்தில் இருக்கின்றன. எங்கள் வங்கிக் கிளைக்கு தீயினால் சுட்ட அவயங்களோடு மனிதர்கள் வருவதைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறேன். அவர்கள் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர்களாக எதிரே நிற்பார்கள். அது பெரும் கொடூரம்!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-70227675780831038692009-10-05T23:34:23.515-07:002009-10-05T23:34:23.515-07:00மகளே! என்று முடிக்கும் போது என்னையறியாமல் கண்ணீர்...மகளே! என்று முடிக்கும் போது என்னையறியாமல் கண்ணீர் வருகிறது.<br /><br />கண்டிப்பாய் கவிதாவிற்கு நல்ல தொரு வாழ்க்கை அமையும். அமையவேண்டும்.<br /><br />இடையில் ஏனோ உங்களின் சுப்பக்கா சிறுகதை ஞாபகத்திற்கு வந்து மனதை பிசைகிறது சார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-28130674338058011862009-10-05T22:29:47.752-07:002009-10-05T22:29:47.752-07:00வணக்கம்,
பட்டாசு தொழிற்சாலைகளில் உள்ள ஒவ்வொரு அறை...வணக்கம்,<br /><br />பட்டாசு தொழிற்சாலைகளில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் தொட்டி இருக்கவேண்டும். இருக்கிரது ஆனால் அவற்றில் தண்ணீர் இருப்பதில்லை.<br /><br />அந்த அறையில் எல்லா கதவுகளும் திறந்திருக்க வேண்டும்.<br /><br />பகல் வெளிச்சத்தில் மட்டும்தான் வெலை செய்ய வேண்டும். அவசரமான ஆர்டர் வரும் போது இது மீறப் படுகிரது.<br /><br />இது போன்று எந்த முறையும் கடைபிடிப்பதில்லை.<br /><br />சோ தர்மனின் "நசுக்கம்" கதை ஞாபகத்திற்கு வருகிறது.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com